Monday 30 January 2012

இது நடந்து இருந்தால்....


வெளி வந்து பல மாதங்கள் / வருடங்கள் கழித்து 12B  படம் பார்த்தேன்.  கிளைமக்சில் தான் கதை ‘அட!’ என்று புரிந்தது.  இது நடந்திருந்தால் இப்படி ஆகி இருக்கும்.. அது நடந்திருந்தால் அப்படி ஆகி இருக்கும் என்று (ஷாம், சிம்ரன், ஜோ) கதை parallel-ஆகா போய் நச்சுன்னு முடிகிறது.   

அதன் சிந்தனை தொடர்ச்சி இந்திய வரலாறு பற்றிய சிந்திக்க வைத்தது ...

இன்று அதிகாரத்தின் உச்ச கட்ட இடமாக இருக்கும் டில்லி, (துபாய் மாதிரி) திடீரென்று வானத்திலிருந்து குதித்த நகரம் இல்லை. ஒரு காலத்தில் பொட்டல் காடாகத்தான் இருந்து இருக்க வேண்டும். கி.மு.வில் வந்த மெகாஸ்தனிஸ், யுவான் சுவாங் போன்ற பொறுப்பான பயனிகளிளிருந்து... சும்மானா வந்து காபி டிபன் சாப்பிட்டுவிட்டு போன பெயர் தெரியாத வெளி நாட்டு பயணிகள் வரை அந்த கால கட்டத்தில் டில்லியை பற்றி எந்த குறிப்பும் உருப்படியாக எழுதவில்லை.  

கி.பி. 736ல் தோமார் என்ற ராஜபுத்திர வம்சா வழியினர் (இன்றைய ஹரியனவிளிருந்து வந்து) தில்லிகா என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கினர்.  அந்த பரம்பரையில் வந்த ஆனாங் பால் என்ற ராஜா தான் லால் கோட் எனப்படும் செங்கோட்டையை கட்டினார்.  (ஷாஜஹான் கட்டியது வேறு) அதன் மெயின் கேட்-இல் சும்மா மிரட்டலுக்காக ரெண்டு பெரிய சிங்க சிலைகளும், கோட்டையின் நடுவில் ஆதிசேஷன்-ஆகா கருதப்படும் ஒரு பாம்பு சிலையும் இருந்தது.  அதுக்கு மேல் ஒரு ஸ்துபியும் அதன் உச்சியில் ஒரு கருட சிலையும் இருந்தது.  மக்கள் குறைகளை சொல்ல அல்லது ராஜாவை கூப்பிட ஒரு கால்லிங் பெல்லும் (அட ஆராய்ச்சி மணிதாங்க..) இருந்தது.  99.72% சுத்தமான இரும்பால் ஆன அந்த ஸ்தூபி இன்றளவும் குதுப் மினார் அருகில் ஜிங்-னு இருப்பதை பார்க்கலாம். மேலே உள்ள கருடன் சிலை பறந்து போன இடம் தெரியவில்லை.  மற்றபடி அந்த லால் கோட்டையின் சிதிலங்கள் மட்டுமே இன்று நம் பார்வைக்கு உள்ளன.

இந்த தோமர்கள் அடுத்த 300 வருடங்கள் ஜாலியாக ஆண்டு விட்டு சௌஹான் என்ற ராஜபுதிரர்களுக்கு வழி விட்டார்கள். அதுல கடைசியா வந்த ராஜா தான் (மூன்றாம்) ப்ரித்விராஜ் சௌஹான்.  ப்ரித்விராஜ் சௌஹான் / சம்யுக்தா காதல் கதை நமக்கு தெரியும்.  சம்யுக்தாவின் அப்பா (கனோசி நாட்டு ராஜா) ஜெயச்சந்திரன்-க்கு கடைசி வரை சௌஹானால் ஏற்ப்பட்ட அவமானம் தீரவே இல்லை. (எந்த மாமனாருக்கு தான் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு?)  Professional life – Personal life ரெண்டையும் ஏகமாக ரொம்பவே குழப்பி இருந்து இருக்கார்.

இந்த கால கட்டத்துல தான் முகமது கோரி –இந்திய மண்ணில் கால் வைத்த ஆப்கானிய அரசன், படை எடுத்து வந்தப்ப நம்ம ப்.சௌ. அண்டை அரசர்கள் எல்லாரையும் ஒண்ணா சேர்த்து சண்டை போட்டு வெற்றியும் கண்டார். ஆனால் இரண்டாம் முறை கோரி பெரிய படையுன் வந்தபோது, ஜெயச்சந்திரன் மட்டும் உதவி பண்ணி இருந்திருந்தா இரண்டாம் முறையும் வெற்றி கிடைத்திருக்கும்.  ஆனால் விதி வேறாக விளையாடி, முகமது கோரி அடிமை சம்ரஜியதிருக்கு அஸ்திவாரம் போட்டது சரித்திரம்.

 சரி.. இதுக்கும் 12B கிளைமாக்ஸ்-க்கும் என்ன சம்பந்தம் ?  இது நடந்திருந்தால் எப்படி ஆகி இருக்கும்....

(ஒண்ணு) முதல் முறை போரில் நம்ம ப்.சௌ. வெற்றி பெற்றபோது முகமது கோரியை கைதியாக கொண்டுவந்தார்கள்.  அப்போ ப்.சௌ, பாவமாக நின்ற கோரியை பார்த்து.. ஹ ஹ .. பிழைத்துப்போ..னு சொல்லி சம்பிரதாயமாக உரைவாளை கோரி கழுத்துல லைட்டா வெச்சு எடுத்தார்.. (ரெண்டு) இரண்டாம் முறை மாம்ஸ் கிட்டருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கல....

ஒரு வேளை மேற்கூறிய ஒன்று ப்.சௌ. கோரியின் தலையை துண்டித்து இருந்தாலோ அல்லது இரண்டாவதாக மாமனாரின் உதவி கிடைத்திருன்தலோ.. இன்று இந்திய சரித்திரம் வேறு மாதிரியாக அல்லவா போயிருக்கும்? டேய்.. அங்க போனா தல மிஞ்சாது.. என்றோ சண்டைனு போனா குடும்பத்தோட சேர்ந்து வந்து கும்மி அடிசிடுவாங்கன்னு என்றோ பின்னால் வந்த (டில்லியை ரத்தக்கடலாக ஆக்கிய) தைமூர் முதற்கொண்டு யோசிச்சு இருக்கலாம் இல்லையா ??

5 comments:

  1. Good one Anand.. nice thought..

    but if it was not kori.. it would be another king.. we can give so many examples like that.. most of the great kings lost wars, because someone back stabbed them..

    Keep it coming....

    ReplyDelete
  2. back stabbed or our kings were nice to them...

    ReplyDelete
  3. good one anand...great start....

    ReplyDelete
  4. nice thought ..great going.!
    nice to see u find time amidst ur schedule..

    ReplyDelete
  5. Wow! Nice thought Anand. Being a king, PC, should have thought what would happen if he left kori alive! Need to be like Chanakya to protect oneself.....think and act...

    Very well written.

    ReplyDelete